உயிரிழப்புகளுக்கு தலா ரூ. 1 மில்லியன் நட்டஈடு

331 0

நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களின் போது உயிரிழந்தவர்களுக்கு, தலா ஒரு மில்லியன் ரூபாய் வீதம் நட்டஈடு வழங்குவதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

இத்தொகையானது, மரணத்துக்காக வழங்கப்படும் 1 இலட்சம் ரூபாய் நட்டஈட்டுத் தொகைக்கு மேலதிகமாகவே வழங்கப்பமெனத் தெரிவித்த அமைச்சர், காயமடைந்தவர்களுக்காக, 1 இலட்சம் முதல் 3 இலட்சம் ரூபாய் வரையில் நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் கூறினார்.