தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவோரை கண்காணிக்க விஷேட குழு நியமனம்

325 0

jeyalalithaதமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவோரை கண்காணிக்க 10 பேர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ஆம் திகதி முதல் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை அவ்வப்போது செய்தி வெளியிட்டு வருகிறது.

இருப்பினும் சிலர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல்வேறு கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.

இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 43 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இச்சம்பவங்களுடன் தொடர்புடைய 2 பேரை கைது செய்துள்ளனர்.

அத்துடன், வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எச்சரிக்கை விடுத்துள்ளனர்.