தெமட்டகொடயில் அதே வீட்டில் சில நிமிடங்களில் மற்றுமொரு வெடிப்புச் சம்பவம்

333 0

தெமடகொட மஹவில பூங்காவிற்கு அருகில் வீடொன்றினுள் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்று சில நிமிடங்களில் மற்றுமொரு வெடிப்புச் சம்பவமும் அதேவீட்டில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்பிரதேசத்தில் பொலிஸார் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர். ஒரு வெடிப்புச் சப்தம் கேட்டவுடன் அவ்விடத்தில் ஒன்றுகூடுவதைத் தவிர்ந்து கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுள்ளனர். இவ்வாறு ஒன்று கூடுவதனால், பொலிஸாரின் விசாரணைகளுக்கு இடைஞ்சலாக இருப்பதோடு, பொது மக்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும் எனவும் பொலிஸார் பொது மக்களைக் கேட்டுள்ளனர்.