யாழில் தேசியத் தலைவர் பிரபாகரனின் சுவரொட்டிகள்(படங்கள்)

408 0

pirabakaran-2யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில், தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப் பீடம் அமைந்துள்ள சுன்னாகம் – மருதனார்மடம் பகுதியிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில் தமிழீழத்; தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது உருவப் படத்துடன் தமிழ் தேசியத்தின் தேசிய அடையாளங்களும் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளே இவ்வாறு ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த சுவரொட்டிகளில் தமிழீழத் தேசிய எழுச்சி நாட்களும், தமிழீழத் தேசிய துயர நாட்களும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சுன்னாகம் பொலிஸார், இத்தகைய சுவரொட்டிகளை யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஒட்டி, அங்கு பதற்ற நிலையைத் தோற்றுவிக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த சுவரொட்டிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தமது உரிமைக்காக போராடிய தமது பிள்ளைகள் உட்பட உறவுகளை நினைவுகூர தமக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என வடக்கு, கிழக்கு மக்கள் அண்மையில் நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறிய முற்பட்ட சட்டத்தரணி முத்தெட்டுவேகம தலைமையிலான விசேட கருத்தறியும் குழுவிடமும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

pirabakaran-1 pirabakaran