சிறீலங்காவுக்கு யப்பான் 23 பில்லியன் யென் கடன் வழங்கியுள்ளது

285 0

japan-1சிறீலங்காவுக்கு யப்பான் 23 பில்லியன் யென் கடன் வழங்கியுள்ளது.சிறீலங்காவின் நிதி ஸ்தீரணத் தன்மையைப் பேணுவதற்கும், சிறீலங்காவில் முன்னெடுக்கப்படும் எதிர்வரும் ஐந்தாண்டுகளுக்கான அபிவிருத்தித் திட்டங்களுக்கும் இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் 10 பில்லியன் யென் அபிருவிருத்தித் திட்டத்துக்காக வழங்கப்பட்டுள்ளது என சிறீலங்காவின் நிதியமைச்சு அறிவித்துள்ளது.அத்துடன் 23.137 பில்லியன் ரூபா நிதி அனுராதபுர வடக்கு நீர்விநியோகத் திட்டத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணத்திற்காக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உடன்பாடு நிதியமைச்சில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.