மதுபானத்தை விற்பனை செய்த உணவகத்திற்கு சீல் !

204 0

பௌர்ணமி தினத்தில் மதுபானத்தை விற்பனை செய்த நவகமு பகுதியில் உள்ள கலால்வரி உரிமம் பெற்றிருந்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

போலி கொள்வனவாளரை பயன்படுத்தி நேற்று வெள்ளிக்கிழமை கலால்வரி திணைக்களத்தின் அதிகாரிகளால் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது அங்கிருந்த பணியாளர் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

உணவகத்தின் முன்பக்கத்தை மூடி, பின்பகுதி வழியாக இவ்வாறு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கலால்வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.