தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தூதுக்குழு, இந்தியா-ஹைதராபாத்துக்கு சென்றுள்ளது.
ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல்.177 விமானத்திலேயே, இக்குழு, இன்று காலை 7:40க்கு, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, திருப்பதியில் வழிபாடுகளில் ஈடுபடுவார் என அறியமுடிகின்றது.