ஜனாதிபதி ஆணைக்குழு – மேலதிக பொலிஸ் குழு நியமனம்

161 0

ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் முதற்கட்ட விசாரணைகளுக்காக மேலதிக பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களில் கடந்த 4 வருடங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளுக்காக இந்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபரின் கோரிக்கைக்கு அமைய அறுவர் அடங்கிய பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் முதற்கட்ட விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் பிரிவில் 18 உத்தியோகத்தர்கள் அடங்குகின்றனர்.

இதேவேளை, இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கு இணங்க, முதற்கட்ட விசாரணைகளுக்காக அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் ஆகியோர், ஆணைக்குழுவில் அடுத்த சில வாரங்களுக்குள் முன்னிலையாகவுள்ளனர்.

அதேபோல், ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, 22ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில், மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் ஒளடத கொள்வனவு ஊழல் குறித்து விசாரிக்கப்படவுள்ளது.

மேலும், அங்கு காப்புறுதி தொடர்பில் கிடைத்துள்ள முறைபாடுகள் குறித்தும் சாட்சி விசாரணைகள் இடம்பெறவுள்ளன.