இந்தியாவிற்குச் சொந்தமான கப்பல் கொழும்பில்(காணொளி)

369 0

shipஇந்திய கடற்படைக்கு சொந்தமான சமுத்ரா பஹரெடர் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்திய கடற்படைக்கு சொந்தமான சமுத்ரா பஹரெடர் கப்பல் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சமுத்ரா பஹரெடர் கப்பல், இலங்கை கடற்படை மரபுக்கேற்ப வரவேற்கப்பட்டது.

கப்பலின் கட்டளை தளபதியான டி.ஆர்.சர்மாவை, இலங்கை மேற்கு பிராந்தியத்திற்கான கட்டளைத்தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த டி சில்வா மேற்கு பிராந்தியத்தின் தலைமையகத்துக்கு அழைத்து கலந்துரையாடவுள்ளதோடு, பயிற்சிகளில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.