வடக்கு, கிழக்கில் மழை பெய்யும் சாத்தியக்கூறு!

271 0

weather_650x488_71439814380தற்போது நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை எதிர்வரும் 13ஆம் திகதிக்குப் பின்னர் மாற்றமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து, வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 7 ஆயிரமாக உயர்வடைந்துள்ளது.

19 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அம்பாறை, பொலநறுவை மற்றும் அனுராதபுர மாவட்டங்களே மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.