ஹொரண வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று (11) காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மர்மமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புளத்சிங்கள, கோவிந்த பகுதியை சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஹொரண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.