பௌத்த தர்மத்தை த.தே.கூட்டமைப்பும் ஏற்றுள்ளது என்ற ரணிலின் கருத்தை மறுக்கிறார் சுமந்திரன் (காணொளி)

340 0

பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறுவதை போல், பௌத்த சமயத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களில் உண்மையில்லை என கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து நியமிக்கப்பட்டுள்ள வழிநடத்தல் குழுவில் இதுகுறித்து கலந்துரையாடப்படவில்லை எனவும் எமக்கு வழங்கிய விசேட செய்தியில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.