தோட்டத்தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்(காணொளி)

417 0

battiதோட்டத் தொழிலாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சம்பள உயர்வு கோரிய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று மட்டக்களப்பு நகர மணிக்கூட்டுக் கோபுரத்தின் அருகில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தலைவர் ஜி.சவுந்தரநாயகம் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சம்பள உயர்வு கோரிய போராட்டத்தில் தொழிலாளர்களைக் காட்டிக் கொடுக்காதே
உழைப்பிற்கு ஊதியமும் வாழ்வாதாரத்திற்கு வேலை நாட்களும் வழங்கு
கம்பனி முதலாளிமாரே தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காதே
சம்பள உயர்வுடன் நிலுவைத் தொகையை முழுமையாக வழங்கு
தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கை ரூபாய் 1000 உடன் வழங்கு போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

மட்டக்களப்பு அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த அங்கத்தவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதேவேளை தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் பொதுமக்களின் ஆதரவுடன் பொது அமைப்புக்கள் இணைந்து எதிர்வரும் புதன்கிழமை பேரணியை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி தோட்டத்தொழிலாளர்களால் 15ஆவது நாளாக மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்திற்கு நாடளாவிய ரீதியில் அரசியல் கட்சிகளாலும், பொதுமக்களாலும் ஆதரவு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிட்டத்தக்கது.