நாமல் குமாரவுக்கு தேவையான பாதுகாப்பினை வழங்க உத்தரவு

358 0

மோசடி எதிர்ப்பு செயலணியின் வழிநடத்தல் தலைவர் நாமல் குமாரவுக்கு தேவையான பாதுகாப்பினை வழங்க குற்றப் புலனாய்வுப் பிரிவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோட்டை நீதவான் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைப் படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் இடம்பெற்றதாக குரல் பதிவொன்றை வெளியிட்டு நாமல் குமார பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இதனிடையே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கொலைச் சதித்திட்டம் குறித்து கருத்து வெளியிடுவதற்கு நாமல் குமாரவிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.