மீண்டும் ஆட்சி பீடம் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஏற முடியாது- டலஸ்

321 0

ஜே.ஆர்.ஜயவர்தனவின் அரசியல் இராஜதந்திர சூழ்ச்சியினையே தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க கையிலெடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தை விமர்சித்தே ஐக்கிய தேசிய கட்சி 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்க வந்த நாளில் இருந்து  இன்று வரையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது. ஆனால்  அவையனைத்தும்  இதுரை காலமும்   நிரூபிக்கப்படவில்லை.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவின் அரசியல் இராஜதந்திரங்களை தற்போது செயற்படுத்த திட்டம் வகுத்துள்ளார். பண்டாரநாயக்கவின் குடும்பத்தினை பிளவுப்படுத்தி ஜே.ஆர் ஜயவர்தன அரசியலில் செல்வாக்கு செலுத்தினார் . 

அதன் தொடர்ச்சியே இன்று இடம்பெறுகின்றது. இலகுவில்  மஹிந்தராஜபக்ஷவின் குடும்பத்தினை பிளவுப்படுத்தி மீண்டும் ஆட்சி பீடம்  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஏற முடியாது. பொதுஜன  பெரமுனவின் நிர்வாகமே 2020 ஆம் ஆண்டு நாட்டை நிர்வகிக்கும் எனவும் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்தரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.