வீதிஅபிவிருத்தி ஊழியர்கள் மீது மோதிய வேன் இருவர் பலி

214 0

அநுராதப்புரத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் வீதி அபிவிருத்தி ஊழியர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அநுராதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தளம் வீதியின் 38 ஆவது தூனுக்கருகில் இன்று சனிக்கிழமை அதிகாலை 12.40 மணியளவில் வீதி புணரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு கொண்டிருந்த வீதி அபிவிருத்தி ஊழியர்கள் இருவர் மீது அநுராதபுரத்திலிருந்து நொச்சியாகமையை நோக்கி சென்ற வேன் மோதுண்டதில் படுகாயமடைந்த ஊழியர்கள் பிரதேச வாசிகள் மூலம் அநுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதின் பின் உயிரிழந்துள்ளனர் என அநுராதபுர பொலிஸார் தெரிவித்தனர்.

இல 182 , நிகவெவ சந்தி , நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய குணசேகர கஜமன் கங்கானம்லாகே விஜயதாச மற்றும் புளுகாகந்த வீதி , கலபனாவ, நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய பியங்கரகே சுஜித் பிரியன் எனப்படும் இரு ஊழியர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

சடலங்கள் அநுராதபுர வைத்திய சாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

குறித்த விபத்து தொடர்பில் வேன் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாகவும்.