இன்று முதல் பாடசாலை விடுமுறை !

237 0

2019 ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணை விடுமுறைக்காக அனைத்து அரசாங்க பாடசாலைகளும் இன்றுடன் மூடப்படுகின்றன.

இந்நிலையில் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைக்கான அனைத்து அரசாங்க பாடசாலைகளும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி திறக்கப்படவுள்ளன.

இதேவேளை, நாட்டிலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் முதலாம் தவணை விடுமுறைக்காக ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி மூடப்படுவதுடன் ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி கல்வி செயற்பாட்டுக்காக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளது.

இந்நிலையில் பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக இரண்டாவது தவணை ஆரம்பிப்பதற்கு முன் பாடசாலை சுற்றுச்சூழலை சுத்தம் செய்ய நடடிவக்கை  எடுக்குமாறு பாடாசலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

அத்துடன் குறித்த விடயத்தை மேற்கொள்வதற்கு பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை சங்கங்களின் உதவியை நாடி செயற்படுமாறு மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.