போதைப்பொருள் பாவனை சிறைச்சாலைகளிலேயே அதிகம் – பிரபாகரன்

348 0

சிறைச்சாலைகளில் போதைப்பொருள் கட்டுப்படுத்தப்படுமாக இருந்தால் நாட்டில் 75 வீதமான போதைப்பொருள் பாவனை தடுக்கப்படும் என யாழ்ப்பாண சிறைச்சாலையின் சிரேஷ்ட சிறை அதிகாரி பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இன்று ஜனாதிபதியின் போதைப்பொருளை ஒழிப்போம், போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுபடுவோம் எனும் தொனிப்பொருளில் சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளும் நிகழ்வு சிறைச்சாலை வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும்போதே யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் சிரேஷ்ட சிறை அதிகாரி என்.பிரபாகரன் இதனை தெரிவித்துள்ளார்.

போதைப்பொருளை ஒழிப்போம் போதைப்பொருளை கட்டுப்படுத்துவோம் எனும் தொனிப்பொருளில் சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டுள்ள போதிலும் அந்த சத்தியப்பிரமாணத்தை வாயளவில் நாங்கள் உச்சரித்துவிட்டு செல்வதில் எந்த அர்த்தமும் இல்லையென அவர் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைக்குள் போதைப்பொருளை ஒழிப்போமாகவிருந்தால், நாட்டில் 75 வீதமான போதைப்பொருள் பாவனை குறைவடையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.