அரசியலமைப்பு சீர்திருத்துவது அவசியம் – சுவிட்ஸர்லாந்து

282 0

srilanka-and-switzerlandஇலங்கையின் அரசியலமைப்பு சீர்த்திருத்தப்படுவது அவசியமானது என்று சுவிட்ஸர்லாந்தின் சபாநாயகர் கிரிஸ்டா மார்க்வோடர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று பௌத்த பீடாதிபதிகளை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவா இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சகல தரப்பினரின் கருத்துக்களும் புதிய அரசியலமைப்புக்குள் உள்வாங்கப்படும் என தம் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளுக்கு தமது வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.