36 ஈழ அகதிகள் இன்று மீண்டும் தாயகத்திற்கு

498 0

return-refugees-380-seithy-300x210-720x480யுத்தம் காரணமாக நாட்டிலிருந்து வெளியேறிச் சென்று இந்தியாவில் தஞ்சமடைந்திருந்த 36 ஈழத்தமிழ் அகதிகள் மீண்டும் தாயகம் திரும்பவுள்ளனர்.இவர்கள் ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் உதவியுடன் இன்று புதன்கிழமை தாயகத்திற்கு அழைத்துச்செல்லப்படவுள்ளதாக சிறைச்சாலைகள், மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு தாயகம் திரும்புவோரில் 20 ஆண்களும், 16 பெண்களும் அடங்குவதாக அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.தாயகம் திரும்பவுள்ள ஈழஅகதிகள் கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் மீள்குடியேற்றப்படவுள்ளதாக அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கான அனைத்து உதவிகளையும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு ஆகியன முன்னெடுக்கின்றன.2011ஆம் ஆண்டு முதல் இன்று வரை 1741 குடும்பங்களைச் சேர்ந்த 4799 பேர் இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்டு மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a comment