மன்னாரில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம்

4203 0

download (3)போதைப்பொருளற்ற சமூதாயத்தை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் மன்னாரில் விழிப்புணர்வு பேரணி இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி மன்னார் திருப்புமுனை மையத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பேரணி முன்னெடுக்கப்பட்டது.மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை, புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மற்றும் மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை மாணவர்கள் ஒன்றினைந்து குறித்த விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்டனர்.

மாணவர்கள் பதாதைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியவாறும் பிரதான வீதி ஊடாக, மன்னார் நகர மத்திய பகுதியில் ஒன்றுதிரண்டு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந்த பேரணியில் மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் செலின் சுகந்தி செபஸ்தியான், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொற்றிகோ, மன்னார் திருப்புமுனை புதுவாழ்வு மைய இயக்குநர் அருட்தந்தை கியுபட் அடிகளார், மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பீ.ஏ. அந்தோனி மார்க் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a comment