வைத்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு இரத்து

303 0

அரச மற்றும் கொத்தலாவல மருத்துவ பீடங்களில் பட்டம் பெற்ற வைத்தியர்களுக்கு நிறைவு பயிற்சியைப் பெற்றுக்கொள்வதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவு இரத்துச்செய்யப்பட்டுள்ளது.

வைத்தியபட்டதாரிகள் 278 பேருக்கு  நியமனங்கள் வழங்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று தடை உத்தரவு இரத்து செய்யப்பட்டுள்ளது.

குறித்த வைத்திய  சேவையை அரச மற்றும் கொத்தலாவல வைத்தியபட்டதாரிகளுக்கு பதவிவழங்கியமைக்கு எதிராக சைட்டம் வைத்திய அதிகாரிகள் மூவர் அடிப்படை உரிமை மனுவை சமர்ப்பித்துள்ளனர். 

குறித்த மனு அடுத்த மாதம் 9 ஆம் திகதி மீண்டும் பரிசீலனை எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.