ஐ.நா. வின் துணைக்குழு இன்று இலங்கைக்கு

336 0

சித்திரவதையை தடுப்பு சம்பந்தமான தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணைக்குழு இன்று இலங்கை வரவுள்ளது. 

நான்கு பேர் கொண்ட இந்தக் குழு ஏப்ரல் 12 வரை இலங்கையில் தங்கியிருக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மோல்டோ, மொரிஷியஸ், சைப்ரஸ் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தக் குழவில் அடங்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கைக்கு விஜயம் செய்யும் அவர்கள் சம்மந்தப்பட்ட அமைச்சர்கள், அரச அதிகாரிகள், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சிவில் அமைப்புக்களையும் சந்திக்க உள்ளனர். 

ஐக்கிய நாடுகள் அமைப்பு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. 

பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் 22ம் திகதி வரை இடம்பெற்ற கூட்டத் தொடர் ஒன்றில் சித்திரவதையை தடுப்பு சம்பந்தமான தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணைக்குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.