மஹிந்த குறிப்பிடும் வேட்பாளருக்கு மக்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்-லக்ஷமன்

281 0

மஹிந்த ராஜபக்ஷ பெயர் குறிப்பிடும் ஒருவருக்கு  நாட்டு மக்கள் முழுமையான ஆதரவு வழங்குவார்கள்  என்ற நம்பிக்கை  உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

மாத்தறை நகரில்  இடம்பெற்ற  நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 19வது திருத்தத்திற்கு அமைய  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ  ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியாத நிலை காணப்படுகின்றது.  பிரதமர் ரணில் விக்ரமசிங்க மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினருக்கு எதிராக 19 வது திருத்தத்தை மிகவும் சூட்மமான முறையில் உருவாக்கினார்.   

ஆகவே இடம்பெறவுள்ள ஜனாதிபதி  தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் வெற்றிப்பெறுவார் எனவும் இதன்போது குறிப்பிட்டார்.