25 இலங்கையர்கள் இன்ரபோலினால் கைது!

376 0

red-notice-76கொலை, பயங்­க­ர­வாத நட­வ­டிக்கை, பாரிய மோச­டிகள் தொடர்­பாக 125 இலங்­கை­யர்­களைக் கைது செய்ய சர்­வ­தேச இன்­டர்போல் காவல்துறையினர் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளனர்.

சர்வதேச காவல்துறையான இன்டர்போலினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் 125 பேரில் 118 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. குறித்த 125 பேரில் 8பேர் பெண்களாவர்.

அத்துடன், போதை வஸ்து வர்த்­தகம், கடத்தல் தொடர்­பாக 10 பேரை கைது செய்­வ­தற்­காக சிறீலங்காக் காவல்துறையினர் இன்டர்போல் காவல்துறையினரின் உதவியை நாடியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.