மீள் மதிப்பீட்டு விண்ணப்ப இறுதி திகதி அறிவிப்பு!

489 0

2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில் விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்கு விண்ணப்ப இறுதி திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பரீட்சார்த்திகள் எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இந்த விண்ணப்பங்களை பதிவுத் தபாலில் பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைப்பது அவசியம். தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான விண்ணப்பங்கள் நாளை தேசிய பத்திரிகைளில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.