கெலிடோ கரையோர நிர்மாண பணிகள் ஆரம்பம்

210 0

கடும் கடலரிப்பு மற்றும் வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள களுத்துறை கெலிடோ கரையோரத்தை நிர்மாணிக்கும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகள் இரண்டு கட்டத்தின் கீழ் இடம்பெறவுள்ளன. 

இதற்காக 3 கோடி ரூபா நிதி ஒதுகீடு செய்யப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக இந்த கரையோரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. களுகங்கை முகத்துவாரம் அதனை அடுத்துள்ள சுற்றாடல் கட்டமைப்புக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வாக இந்த பணிகள் முன்னெடுக்கப்படும்.