6 மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் – லக்ஷ்மன் யாப்பா

274 0

இன்னும் 6 மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தேர்தலில் ராஜபக்ஷ குடும்பத்திலிருந்தே, ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தெரிவாகும் நிலை காணப்படுகின்றது.

நாட்டில் கூட்டமைப்பு அமைக்கப்படும் சந்தர்ப்பங்களில், சிறுபான்மைக் கட்சிகள், பிரதான கட்சியுடன் இணைவதே வழமை. இன்று பலமான எதிர்க்கட்சியாக நாம் இருக்கிறோம். அதனால், பொதுஜன பெரமுனவுடனேயே கூட்டமைப்போம். சின்னம் மொட்டாகவே இருக்கும்.

அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் விரிசல் காணப்பட்டது, ஆனால் தற்போது அத்தகைய நிலை’ என தெரிவித்துள்ளார்.