ருமேனியாவில் அவசரமாக தரையிறங்கிய ஸ்ரீலங்கன் விமானம்

234 0

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 504 எனும் விமானம் லண்டனில் இருந்து கொழும்பு நோக்கி திரும்புகையில் திடீரென ருமேனியாவின் புக்கரஸ்ட் விமான நிலையத்தில்  தரையிறக்கப்பட்டுள்ளது.  

விமானத்தில் இருந்த பயணி ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக நேற்று இவ்வாறு குறித்த விமானம் ருமேனியாவின் புக்கரஸ்ட்டில் தரையிறப்பட்டதாக ஸ்ரீ லங்கன் விமான சேவை தெரிவித்தது. 

குறித்த விமானம் ரூமேனியவில் தரையிறக்கப்பட்டதன் பின்னர், விமான நிலைய வைத்தியர்கள் விமானத்தில் இருந்த சிறு நீரக நோயால் பாதிக்கப்பட்ட குறித்த பயணிக்கு சிகிச்சையளித்துள்ளனர்.   

எவ்வாறாயினும் நேற்று மாலை ஆகும் போதும், ருமேனியவைல் தரை இறங்கிய விமானம் அங்கு புக்கரஸ்ட் ஹென்ரி கொன்டா விமான நிலையத்தில் தரித்திருந்தது.

இதனால் விமானத்தில் இருந்த 195 பயனிகளும் ருமேனியாவின் புக்கரஸ்ட் நகர நட்சத்திர ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

விமானம் மீள புறப்பட  சமிக்ஞை கிடைக்கும் வரை அதன் சேவையாளர்களுக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.  பொறியியல் அறிக்கை உள்ளிட்டவை கிடைத்த பின்னர் விமானம் மிக விரைவில் விமானம் இலங்கைக்கு திரும்பும் என ஸ்ரீ லங்கன் விமான சேவை தெரிவித்தது.