தாய் ஏசியதால் தூக்கில் தொங்கிய சிறுமி

216 0

ஹட்டன் பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் இன்று காலை 9 மணியளவில்   தனது தாய் ஏசியதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொகவந்தலாவ குயினா மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 17 வயதான  பரமநாதன் நித்தியா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி தனது வீட்டிலிருந்து பொகவந்தலாவ நகரப்பகுதிக்கு தொழில் நிமிர்த்தம் செல்வதாக கூறி சென்றவர், மீண்டும் வீடு திரும்பிய சிறுமி வீட்டில் எவரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாகவும், தனது தாய் தன்னை ஏசியமையாலேயே தான் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொள்வதாக குறித்த சிறுமி கடிதம் ஒன்றையும் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் குறித்த பகுதிக்கு கைரேகை பரிசோதனை பிரிவினர் வரவழைக்கப்பட்டு விசாரனைகளை ஆரம்பிக்கபட்டுள்ளதோடு திடீர் மரண விசாரனையாளர் திருமதி லக்ஸ்மி தலைமையில் மேலதிக விசாரனைகளை மேற்ககொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சிறுமியின் சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தரிவித்தனர்.

 இந்நிலையில் குறித்த  சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.