கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவி, மனைவியின் தயாரை தாக்கி கொலை செய்த நபர் கைது

184 0

திஸ்ஸமாராம, சதுன்கமையில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவி, மனைவியின் தயாரை தாக்கி கொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த சம்பவத்தில் 28 வயதான மனைவி மற்றும் மனைவியின் 54 வயதான தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சந்தேகத்தின் பேரிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள நபர், இராணுவத்திலிருந்து தப்பி சென்ற 28 வயதான நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபரை கைதுசெய்து மேலதிக விசாரணைகைளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.