யாழில் விபத்து

281 0

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிலிப்பாய் சீரணிச் சந்தியில் இன்று அதிகாலை விபத்து இடம்பெற்றுள்ளது.

இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு முந்திச் செல்ல முற்பட்டபோது, தனியார் பேருந்து ஒன்று மின்கமபத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பயணி பேருந்துக்குள் அகப்பட்டிருந்த நிலையில் நீண்ட நேரத்தின் பின்னர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.