சூரியசக்தி மூலமான மின்னுற்பத்திக்கு அனுமதி வழங்க அரசாங்கம் மறுப்பு

285 0

சூரியச சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் திட்டத்தை அனுமதிப்பதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் மறுப்புத் தெரிவித்து வருவதாக சூரிய சக்தி தொழில்  துறை சங்கத்தின்  செயலாளர் லக்மால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சூரியசக்தி  மூலமான  மின் பிறப்பாக்கியை அமைப்பதற்கு  3 வருடங்களாக 300 மூதலீட்டாளர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற 650 விண்ணப்பங்களை இலங்கை மின்சார  சபை பரீசீலிக்காமல்  இருப்பதுடன், அனுமதி  வழங்க  மறுக்கின்றனர்.

ஆகவே அத்திட்டத்தினை  நடைமுறைப்படுத்துவதற்கான தீர்வுகளை   பெற்றுதருமாறு  அரசாங்கத்திடம்  கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.