இணையவழி மூலம் பரீட்சை-பரீட்சைகள் திணைக்களம்

265 0

முதல் முறையாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக பாடசாலை பரீட்சைகளை இணையவழி ( online ) மூலம் நடத்துவது சாத்தியமாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய உயர் தர மாணவர்களுக்கான தகவல் தொழிநுட்ப பரீட்சை இம்மாதம் 11 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரை இரு அமர்வுகளாக இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பரீட்சையில், ஒரு இலட்சத்து 86 ஆயிரம் பேர் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.