இலங்கையின் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று இந்தியாவின் பிரதிநிதி ஜெனிவா மனித உரிமை பேரவையில் தெரிவித்தார்.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் இன்றைய தினம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இந்தியப் பிரதிநிதி மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.