மஸ்கெலியா பிரதேச சபையால், சிவனொளிபாத மலையின் அடிவாரத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைக்கு விசமிகள் சிலர் தார் ஊற்றியச் சம்பவத்தையடுத்து, அங்கு பதற்றமான நிலையொன்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர், நோர்வூட் பொலிஸார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதுடன், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
பெயர் பலகையை சீரமைக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.