புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி

202 0

மோட்டார் சைக்களிலில் பயணித்த ஒருவர் புகையிரதத்துடன் மோதுண்டு உயிரிழந்துள்ள சம்பவமொன்று ரத்கம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை 1.20 மணியளவில் கொழும்பிலிருந்து காலி நோக்கி எண்ணெய் ஏற்றிச் சென்ற புகையிரதத்துடன் மோதுண்டே இவர் விபத்துக்குள்ளானதையடுத்து, குறித்த நபர் சிகிச்சைக்காக கராபிடிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் ரத்கமை பள்ளியப்பிடி பகுதியைச் சேர்ந்த 63 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.