யாழில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

316 0

யாழ்.நகர வர்த்தக நிலையங்களை தவிர்த்து ஏனைய வர்த்தக நிலையங்கள், பொது சந்தைகள் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து இன்று செவ்வாய்க்கிழமை பூட்டப்பட்டமையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்க கூடாது, அத்தோடு போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் வடக்கு, கிழக்கு ரீதியாக ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் யாழ் நகர வர்த்தக நிலையங்களை தவிர ஏனைய பிரதேச வர்த்தக நிலையங்கள்,பொது சந்தைகள் அனைத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மூடப்பட்டன. மேலும் போக்குவரத்து சேவைகள் வழமை போல இயங்கியதுடன் பாடசாலைகளும் வழமையான கற்றல் செயற்பாடுகள் நடைபெற்றன.