பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வினை வழங்குவதற்குஅரசியல்வாதிகளே தடையாகவுள்ளனர் – பாலித

324 0

அரச துறைகளில் பணியாற்றிய, கடந்த அரசாங்கத்தால் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வினை வழங்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் போது , சில அரசியவாதிகளால் அதற்கு தடை ஏற்படுத்தப்படுகின்றது. இதன் காரணமாக உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தீர்வினை வழங்க முடியாத நிலைமையே காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். 
ஐக்கிய தேசிய கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.