கோவில்கள் அமைந்திருக்கும் இடங்களில் நிர்மாணிக்கப்படும் விகாரைகளை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை!

241 0

இந்துக்கோயில்கள் இருக்கும் இடங்களில் புத்த விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டுவரும் நிலைமைகள் இருக்கின்றன. ஆகவே இதுதொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் கவனம் செலுத்தி இவற்றை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் புத்தசாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு மற்றும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

வன்னி மாவட்டத்தில் வீட்டு திட்டத்தில் புள்ளிவிபரங்களில் விடுபட்ட மக்களில் விதவைகள், பெண்கள் தலைமை வகிக்கும் குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களுக்கும் வீட்டுத்திட்டத்தில் சந்தர்ப்பம் வழங்கவேண்டும் என அமைச்சர் சஜித் பிரேமதாஸவிடம் இதன்போது வலியுறுத்தல் விடுத்தார்.