கோத்தாவை களமிறக்க ராஜபக்ஷவினர் முயற்சி

365 0

ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயளாலர் கோத்தாபய ராஜபக்ஷவை களமிறக்குவது தொடர்பாக ராஜபக்ஷ குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் கலந்துரையாடி முடிவிற்கு வந்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந் நிலையில் இது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள்ளும் எதிர்கட்சி தலைவர் மஹிந்தராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியின் அங்கத்துவ கட்சிகள் சிலவற்றுக்குள்ளும் அதிருப்திகள் வெளியாகியுள்ளன. 

கடந்த வியாழக்கிழமை கொழும்பிலுள்ள மஹிந்தராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ராஜபக்ஷ குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் குறித்து ஆராய்ந்ததாகவும் , பெரும்பாலும் கோத்தாபய ராஜபக்ஷவை களமிறக்க முடிவுகள் எடுத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேவேதளை பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷவை களமிறக்குவது தொடர்பில் இடதுசாரி கட்சிகள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றது. 

அதனால் இவ் விடயம் தொடர்பில் எதிர்கட்சி தலைவர் மஹிந்தராஜபக்ஷ பொது ஜன பெரமுனவின் அனைத்து உறுப்பினர்களுடன் அடுத்தவாரம் முக்கிய கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.