கொழும்பிலிருந்து- தம்பலகாமம் ஊடாக மூதூர் பிரதேசத்துக்கு, பொருட்களை ஏற்றிச்சென்ற லொறி ஒன்று, தம்பலகாமம் கோணேஸ்வர கோயிலடிக்கு முன்னால், இன்று (15) அதிகாலை 4.00 மணியளவில் குடைசாய்ந்ததில் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
லொறியின் டயார் ஒன்று வெடித்ததாலேயே, லொறி குடை சாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில், மூதூர் ஆலீம் நகர் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தம்பலகாமம் வைத்தியசாலையின், பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தம்பலகாமம் பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.