மொரட்டுமுல்ல துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு!

250 0

மொரட்டுமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மொரட்டுமுல்ல பிலியந்தலை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

இன்று காலை 10.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியுள்ளனர். 

துப்பாக்கிச் சூட்டில் வீட்டிற்கு முன் நின்று கொண்டிருந்த பஸ் உரிமையாளர் ஒருவரும் அவரின் மகனின் நண்பனும் உயிரிழந்துள்ளனர். 

பஸ் உரிமையாளரின் மகன் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். 

தனிப்பட்ட பிரச்சினையே துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் என்பதுடன், சந்தேகநபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மொரட்டுமுல்ல பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன