கஞ்சாயுடன் இருவர் கைது!

244 0

குருந்துவத்த -ஹெடேவத்த பிரதேசத்தில் ஒரு தொகை கேரளா கஞ்சாயுடன் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக குருந்துவத்த பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தவலின்படி பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 11 கிலோ 585 கிராம் கேரளா கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.

வவுனியா பிரதேசத்தை சேர்ந்த 28 வயது மற்றும் 29 வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சந்தேக நபர்கள் இன்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டவுள்ளார் இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.