பொள்ளாச்சி அருகே கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி!

266 0

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கெடிமேட்டில் உள்ள பிஏபி கால்வாயில் கார் கவிழ்ந்து 6 பேர் உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம்  பொள்ளாச்சி அருகே கெடிமேட்டில் உள்ள பிஏபி கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியாகினர். 
காரில் சென்றவர்கள் கோவை மசக்காளி பாளையத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பழனி கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது இந்த விபத்து நேரிட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.