ஜே.வி.பி.யின் முயற்சிக்கு த.தே.கூ. ஆதரவு வழங்கும் – சம்பந்தன்

255 0

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இரத்து செய்ய மக்கள் விடுதலை முன்னணியினர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆதரவு வழங்கும் என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் அதிகார பகிர்விற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற நெடுநாள் கோரிக்கைகளுக்கு ஜே.வி.பி.யினர் முழுமையான  ஆதரவு நல்குவதாக குறிப்பிட்டுள்ளமை திருப்திகரமானது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் மக்கள் விடுதலை முன்னணியினருக்குமான சந்திப்பு மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே சம்பந்தன் இதனை தெரிவித்துள்ளார்.