24 கிலோ கேரள கஞ்சாவுடன் 5 பேர் கைது!

206 0

24 கிலோ கேரள கஞ்சாவுடன் 5 பேர் களுத்துறை சட்டத்தை அமுல்படுத்தும் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று (10) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அளுக்கம் மற்றும் தர்கா டவுன் பகுதிகளை சேர்ந்த 23, 32, 35, 38 மற்றும் 47 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.