கடும் குளிரால் சிவனொளிபாத மலை யாத்திரை சென்ற யாத்திரிகர் மரணம்!

203 0

கடும் குளிர் காரணமாக சிவனொளிபாத மலை யாத்திரை செய்த யாத்திரிகர் ஒருவர் சிவப்பு அம்பளம் பகுதியில் இன்று (11) அதிகாலை 4 30 மணி அளவில் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு மரணமடைந்தவர் பதுளை, கெந்தகொல்ல பகுதியைச் சேர்ந்த வயது 53 ஜே.எம். தர்மகீர்த்தி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இவர் சிவனொளிபாத மலை தரிசிப்பதற்காக சென்றபோது கடும் குளிர் காரணமாக நெஞ்சு வலியால் அவதியுற்று வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முயற்சிகள் மேற்கொண்ட நிலையில் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இவரது சடலம் வைத்திய பரிசோதனைக்காக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில தினங்களாக மலையகத்தில் சில பகுதிகளில் பல்வேறு இடங்களில் கடும் வரட்சியுடன் கடும் குளிர் நிலவி வருவதும் குறிப்பிடத்தக்கது.