புலிகளால் தாக்கி அழிக்கப்பட்ட வலம்புரியின் சிதைவுகள் மீட்பு

282 0

valampuri-ship-wrakage-1விடுதலைப் புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்ட கடற்படைக்கு சொந்தமான வலம்புரி என்ற கப்பலின் சிதைவுகள் யாழ்ப்பாணக் கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் இருந்து 8 கடல்மைல்களுக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில், 15 மீற்றர் ஆழத்தில் இவை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1998ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி தற்கொலைத் தாக்குதல் மூலம் இந்த கப்பல் அழிக்கப்பட்டது.

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் 20 கடற்படையினர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

valampuri-ship-wrakage-2