பேர்லினில் நடைபெற்ற அனைத்துலக பெண்கள் தின பேரணியில் தாயகத்து ஈழத்தமிழ் பெண்களின் அவலத்தை எடுத்துரைத்த குரல்.

403 0

காணொளி

யேர்மன் நாட்டின் தலைநகரம் பேர்லினில்  அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு பல்லின பெண்களுடன் இணைந்து தமிழ் பெண்கள் அமைப்பு உறுப்பினர்களும் ஈழத்தமிழ் பெண்களுக்கு நீதி கோருவதற்கான வாய்ப்பாக கடைப்பிடித்தார்கள். இப் பேரணியில் நூற்றுக்கணக்கான   வேற்றின பெண்கள்  இணைந்து கொண்டனர்.
நடைபெற்ற பேரணியின் இறுதி நிகழ்வில் ஈழத்தமிழ் பெண்கள் சார்பாக உரையாற்றிய சகோதரி  , இன்றும் தாயகத்தில் தமிழ் பெண்கள் சொல்லொணா துன்பத்திலும் , சிங்கள இராணுவத்தின் பாலியல் கொடுமைகளுக்கும் , அடக்குமுறைகளுக்கும் முகம் கொடுத்து வாழ்கின்றனர் என்பதையும், தமிழ் பெண்களின் பாதுகாப்பிற்கும் மற்றும்  உலகம் எங்கும் அடக்குமுறைக்குள் வாழும் பெண்களுக்கும்  தமிழ் பெண்கள் அமைப்பு சார்பாக தமது தோழமையையும் ஒற்றுமையையும் தெரிவித்தார்.